2006-02-23

சிறைமீட்பு

வாகன விபத்து வழக்கில் சிக்கி கடந்த ஒன்றரை வருடமாக சவுதி அரேபியாவின் ரியாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழரான திரு அகஸ்டின் துரைசாமி நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரே முதல் நீதிபதிகள் என்ற அடிப்படையில் அவர்களின் மன்னிப்பை அடுத்து அவர் விடுதலை பெற்றிருப்பதாகத் தெரிகிறது. மற்ற விவரங்கள் தெரியவந்தபின் எழுதுகிறேன்.

இது குறித்து நான் முன்பு எழுதிய பதிவுகள்:

http://akaravalai.blogspot.com/2005/03/blog-post_12.html

http://akaravalai.blogspot.com/2005/08/blog-post_15.html

சங்கமம் வலைப்பதிவில் சுவனப்பிரியன் எழுதியது:

http://suvanappiriyan.blogspot.com/2006/02/blog-post_11.html

2006-02-17

தலைப்புச் செய்தி

என்ன புதுசா இருக்கப்போகுது அப்படின்னு நெனைக்காம அப்படியே ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துட்டீங்கன்னா பிரயோசனாமாயிருக்கும். (அட உங்களுக்குத் தானுங்க!)

அழகி- இப்போது இலவசம்

2006-02-15

தமிழ்மென்பொருள்

தமிழ்மென்பொருள் சிலவற்றைப்பற்றி அறிய...

வருக!
தமிழ் மென்பொருள்கள்

புதுசு புத்தம்பதுசு

எல்லோரும் வருகை தந்து வாழ்...
சாரி வாசித்தருள அன்புடன்...

*
[ http://valai.blogspirit.com/ ]
*

2006-01-05

வாழ்த்து

புத்தாண்டின் பொலிவிற்காய்
பூச்சொரிந்த வாழ்த்துக்கள்!

இயற்கையும் இவ்வாண்டில்
கூடாமல் குறையாமல் வளம் பொழிக

கொலைவாளினை கைவிட்டே
கயவரும்காத்திடுக பூமியின் புதல்வர்களை.

நம்கடமை நாம்செய்ய அவரவர் அவர்தம் கடமையாற்றி
அகிலத்தை அமைதியாக்கி, ஆற்றலூட்டுக!

2005-12-10

இன்னுமொரு பாட்டு

இன்று தொலைக்காட்சியில் ஒரு பாடல் பார்க்க/கேட்க நேர்ந்தது.

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்...

கல்லூரிப் பருவத்தின் இறுதிநாள் பிரிவுபசார நிகழ்வில் பாடப்படும் பாடலாக ஸ்ரீகாந்த் சினேகா + நடித்திருந்தார்கள். படம் பெயர் தெரியவில்லை. அதைப் பார்த்தவுடன் எங்கள் கல்விப்பருவங்கள் நினைவுக்கு வந்தன.

அப்போதெல்லாம் வகுப்புகள் நிறைவுறும் நாளில் பள்ளி, கல்லூரிகளில் பாடப்படும் பிரியாவிடைப் பாடல் இதுதான்

பாடித்திரிந்த பறவைகளே... (படம்: இரத்தத் திலகம்)

அந்தப் பாடலின் கருத்தும் உணர்வும் எப்போது கேட்டாலும் அந்த நாளை நினைக்க வைத்துவிடும். அது போன்ற நினைவுகளை மீட்டிய பாடல்களை பட்டியலிட பாடல் ரசிகர்களை அழைக்கிறேன்.

2005-12-06

பாட்டுக்கள் தேடி...

ஒவ்வொரு பூக்களுமே...(ஆட்டோகிராப்)

மாதிரி தமிழில் நல்ல தன்னம்பிக்கைப் பாடல்கள் எத்தனை தேறும் என்று யோசித்தால்

தோல்வி நிலையென நினைத்து....(ஊமை விழிகள்)

உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...(உன்னால் முடியும் தம்பி)

இவ்வளவுதான் என் நினைவுக்கு எட்டியது...

இந்தப் பட்டியலை பாடல் ரசிகர்கள் பின்னூட்டத்தில் தொடரலாம்...