2004-10-01

செய்தியிலிருந்து

இன்றைய தினமணியில் வைரமுத்து கவிதைகளின் இந்தி மொழியாக்க நூல்வெளியீடு பற்றிய செய்தியிலிருந்து-

.....இந்த விழாவில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் "காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் வழிகாட்டுதலின் பேரில், திமுக தலைவர் கருணாநிதி போன்ற மூத்த தலைவர்களின் ஆதரவுடன், மன்மோகன்சிங் தலைமையிலான அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ளது."....

.....மத்தியகப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி ஆர் பாலு பேசுகையில் "வைரமுத்துக்குக் கிடைத்த இந்த வெற்றி கருணாநிதிக்குக் கிடைத்த வெற்றி" என்றார்.....

தமிழறிஞர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, தமிழகக் கூட்டணிக் கட்சிகளின் வற்புறுத்தலை அடுத்து காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ள உண்மை அரசியல்வாதியின் வாய்மொழியில்
எப்படி வருகிறது பாருங்கள்!

அதுசரி.... வைரமுத்து இந்தியில் கவிதைத்தொகுப்பு வெளியிட்டது எப்படி கருணாநிதியின் வெற்றியாகும்? விளக்குவாரா பாலு? (நாக்கு வழிப்பதுண்டா மகாமந்திரி)

No comments: