2004-12-26

வாழ்வே மாயம்

முதல் அடியில் கடற்கரைக் குடிசைகள் நாசமாகிவிட கடலோரம் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போயினர். மிச்சம் மீதி இருந்தவர்களை கடல் இழுத்துக் கொண்டு போனது. குடிசைகள் மட்டுமல்ல பெரிய புதிய வீடுகளும் நிறையவே சேதமடைந்து விட்டன. வாகனங்கள் தூக்கியடிக்கப்பட்டு பாதி மண்ணுக்குள் புதையுண்டு சிதைந்து கிடந்தன. சுற்றுலா வந்தவர்கள், விழாக்கால விடுமுறைக்கு வந்தவர்கள், விடுமுறையில் விசேசங்களை நடத்த எண்ணியிருந்தவர்கள் என சகலரும் பூமிக்குள் புதையுண்டு போயினர்.
சகதிகளுக்கிடையிலிருந்து சாரி சாரியாக சடலங்களை எடுக்கத் தொடங்கிய போதுதான் சூழ்நிலையின் பயங்கரம் பலருக்கும் உறைத்தது. கும்பகோண நெருப்பு தந்த சோகம் மறைவதற்குள் வெள்ளம் உலகைச் சூறையாடி மற்றொரு சோக வரலாற்றை அரங்கேற்றி விட்டது. தப்பி ஓடி ஆங்காங்கே தஞ்சமடைந்தவர்கள் வரிசையாகக் கொண்டு வரப்பட்ட சடலங்களிடையே தங்கள் உற்றவரைத் தேடிக் கதறி அழத் தொடங்கினர்.

நேற்றிருந்தவர்கள்..... இன்றில்லை

No comments: