2006-09-29

படைப்பும் பார்வையும்

1

தேன்கூடு தளத்தில் லிப்ட் என்ற சொல்லுக்கு தரப்பட்டிருந்த பொருள் இந்தக் கவிதைக்கு வித்திட்டது. போட்டிக்கு அனுப்பிய பின் சில திருத்தங்கள் தோன்றியது. ஆனால் விதிமுறைகளின் படி பதிவில் திருத்தம் செய்யவில்லை. திருத்தப்பட்ட முழுக்கவிதை இங்கே.


கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

*
கொஞ்சம் லிப்ட்
கிடைக்குமா?
சாலையோரமாய்
அல்ல
வாழ்வினோரமாய்
காத்திருந்தேன்.

ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைக்கும் கூட்டம்
பெருகிவிட்ட காலத்தில்
ஏணிகள் அஞ்சுவது
இயற்கைதான்.

ஏறிவிட ஏணியில்லை
ஏற்றிவிட யாருமில்லை
வீற்றிருந்த காலமெல்லாம்
வீணாகிப் போனதிங்கே...

படிக்காத பாடங்கள்
படித்தபின்னே
புத்தியென்னும்
உத்தி தெளியும்

ஏணிவேண்டாம்
எவரும்வேண்டாம்
தன்னம்பிக்கை எனும்
தளரா உறுதி கூட
ஏணியாக ஏற்றிவிடும்...

தாமதமாய்
தானுணர்ந்து
ஏறுகிறேன்
வாழ்க்கையெனும்
ஏறுபாதையில்...

எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்...


[கவிதை]

விமர்சகர்கள் பார்வையில்:

சோம்பேறி பையன் விமர்சனம்:

வாழ்க்கை மீதுள்ள நம்பிக்கை பற்றிய கவிதை.

எளிமையான, சிற்சிறு வரிகள் கவிதைக்கு பலம்.
"எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்... "
போன்றவை ரசிக்க வைக்கின்றன.

கவிதை, நம்பிக்கை !!

முரட்டுக் காளை விமர்சனம்:

"சிகரம் எட்டுமென்ற நம்பிக்கையே நமக்கும் உரமாய்"

பின்னூட்ட விமர்சனம்:

#முரட்டுக்காளை கூறுவது:

கவிதை வாசித்தேன். அருமை.

*
2

போட்டிக்கான தலைப்பை வாசித்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக எழுதத் தோன்றியது. சிறுகதையின் இலக்கணங்களை உள்ளடக்கியதாக, துவக்கம், களம், சஸ்பென்ஸ், முடிவு என எல்லாம் அமைந்த ஒரு கதை, வாசித்த பிறகு கதை நிகழ்வு வாசகரின் மனத்திரையில் ஓடவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதியது. நோக்கத்தில் வெற்றி கண்டதாகவே கருதுகிறேன்.


கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

வேகமாகச் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" என்ற இளம்பெண் மறுநாள் சாலையோரம் கற்பழித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவளுக்கு எய்ட்ஸ்.


[இருவரிக்கதை]

விமர்சகர்கள் பார்வையில்:

சோம்பேறி பையன் விமர்சனம்:

இரண்டு வரிகளில் ஒரு அருமையான கதை.
க்ளைமேக்ஸ் நச்.
தேர்ந்தெடுத்த வார்த்தைகள், களம், முடிவு என அசத்துகிறது கதை.
நிச்சயம் படிக்க வேண்டும். கதை, கலக்கல் !!

முரட்டுக் காளை விமர்சனம்:

"நிமிடத்தில் படிச்சிடலாம்.
வியப்பு தான் அகல சிலநேரம் பிடிக்கும்."

பின்னூட்ட விமர்சனம்:

# அமுதன் கூறுவது:

நல்ல கதை....
இரண்டு வரிகளில் நச்சென்று இருக்கிறது.....
இருவரிக் கதை என்ற பெயரில் ஹைக்கூ கதை முயற்சி....
வாழ்த்துக்கள்,....

# நெல்லை சிவா கூறுவது:

பக்கம் பக்கமாக எழுதி கவர முற்பட்டுக் கொண்டிருக்க,
இரண்டே வரிகளில்,
இதயம் கவருவது திறமைதான். வாழ்த்துக்கள்

# முரட்டுக்காளை கூறுவது:

தலைப்பு கொடுத்தவரே கொஞ்சம் நிறைய எழுதியிருக்கிறார்.
நீங்க இப்படி 2 மார்க் பதில் எழுதுற மாதிரி ஆக்கீட்டிங்களே.. :-)
ஆனா சூப்பர்.

# Dubukku கூறுவது:

very nice attempt. have voted for this cheers :)

*
வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி!

தேன்கூடு போட்டி விவாதங்கள்!

தேன்கூடு-தமிழோவியம் இணைந்து நடத்தும் படைப்பாக்கப் போட்டி தமிழ் வலைப்பதிவர்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டும் போட்டி. இந்த நோக்கமும் முயற்சியும் மிக உயர்வானது.

இப்போட்டியின் வெற்றியாளர்கள் வலைப்பதிவர்களால் வாக்களிப்பு முறையில் தேர்வு செய்யப் படுகின்றனர். இதிலுள்ள சில பிரச்சினைகளால் இப்போது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. பல பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட செல்வாக்கு, நண்பர்கள், ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதாக சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இதில் ஓரளவு உண்மையும் இருக்கக்கூடும்.

ஆரம்பத்திலேயே பதிவர்கள் போட்டிப் படைப்புகளைத் தங்கள் பதிவுகளிலேயே வெளியிட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை தான். அதனாலேயே ஆரம்ப போட்டிகளில் நான் கலந்து கொள்ளவில்லை. பெயரறியாமல் தான் படைப்புகளுக்கான வாக்களிப்பு நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது கூட சிலர் ரகசிய பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்ற போதும்!

எனினும் இம்முறை தலைப்பு தந்த உத்வேகத்தில் எழுதிய சின்னஞ் சிறுகதையை சும்மா பதிவிட வேண்டாமே என்று போட்டிக்கான இணைப்பில் பதிவு செய்தேன். அங்கே கண்ட lift என்ற சொல்லுக்கான பொருள் கவிதைக்கான விதை தூவியதில் கவிதையும் தயார்.

எனினும் தொடர்கதையை விளம்பரப் படுத்திய நான் போட்டிக்கான படைப்புகளுக்கு எந்தச்சிறு விளம்பரமும், பிரச்சாரமும் செய்யாதிருக்க கவனமாக இருந்தேன். உண்மையில் அந்தப் படைப்புகளைப் படித்தவர்கள் மிகச்சிலரே! திரட்டிகளில் பார்த்து, நேரடியாக போட்டி பட்டியலில் இருந்து படித்து எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் என்று அறியும் நோக்கமிருந்தது.

எனது படைப்புகளுக்கு 15 மற்றும் 14 வாக்குகள் விழுந்துள்ளன. இதில் முக்கியமாக சோம்பேறி பையன் மற்றும் முரட்டுக்காளை ஆகியோர் எழுதிய விமர்சனப் பதிவுகளில் இந்தக் கதை பற்றிய உயர்வான புகழுரை கேட்டே பலரும் வாசித்திருக்க வேண்டும்/வாக்களித்திருக்க வேண்டும்.

இவ்வளவு படைப்புகள் வந்துள்ள நிலையில் கவனம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் படைப்புகளுக்காக என்றில்லாமல் படைப்பாளிகளுக்காக பெறப்படும் கவனம் நேர்மையான போட்டிகளுக்கு இடையூறானதுதான்.

எனவே போட்டியை நடத்தும் தேன்கூடு-தமிழோவியம் நிர்வாகத்தினர் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்வது நல்லது.

பிற போட்டிகள் பலவும் நடுவர்களால் மட்டுமே தேர்வு செய்யப்படும் நிலையில் மாறுபட்ட முறையில் பதிவர்களின் பங்களிப்புடன் தேர்வு செய்யப்படும் வாக்குப் பதிவு முறை நீக்கப்பட அவசியமில்லை. வாக்களிப்பு முறைதான் இந்தப் போட்டிக்கான தனித்துவம் என்பதால் இதை சில மாற்றங்களுடன் மேற்கொள்ளலாம்.

மேலும் கதை, கவிதை, கட்டுரை அனைத்தையும் ஒரே போட்டிக்கான வரைமுறையில் வைத்திருப்பது சரியானதாகத் தோன்றவில்லை. தொடர்பதிவுகள் போட்டிக்கு அனுமதிக்கப்படுவதும் சரியெனத் தோன்றவில்லை. ஒரே தலைப்பில் கதை, கவிதை, கட்டுரைகளைத் தனித்தனியாகத் தேர்வு செய்யலாம்.

போட்டிக்கான படைப்புகள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு பொதுவான ஒரு வலைத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் இடப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படலாம். பெயருக்கு பதிலாக எண்கள் மட்டுமே பதிவில் இடப்பட வேண்டும். உதாரணமாக கதை-1, கதை-2, கவிதை-1 இப்படி.

சூசகமாகவேனும் சில பெயர்கள் வந்துவிடலாம் என்பதால் அங்கே பின்னூட்டங்கள் அனுமதிக்கப் படாதிருப்பதே நல்லது. அதற்கு மேலும் ரகசியப் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டார்கள், தங்கள் படைப்புகளில் நம்பிக்கை வைப்பார்கள் என்றும் பதிவர்களின் நேர்மையில் நம்பிக்கை வைத்து இத்தகைய மாற்றங்களை பரிந்துரைக்க விரும்புகிறேன்.

மேலும் மொத்தமாக விமர்சனம் செய்கிறவர்கள் மதிப்பெண் இடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதுவும் சில முன்முடிவுகளை வாக்குப் பதிவின்போது ஏற்படுத்திவிட நேரும்.

இத்தகைய மாற்றங்களை மேற்கொள்வதின் மூலம் எதிர்வரும் போட்டிகளில் படைப்புகளின் தேர்வில் ஓரளவுக்கு சர்ச்சைகளைத் தவிர்க்கலாம்.

2006-09-24

ஒரு கதை! ஒரு போட்டி!!

கதை கேட்பது என்பது சிறு வயதில் எல்லோருக்குமே மிகவும் விருப்பமான விஷயம் தான். கூட்டுக் குடும்பமாக எல்லோரும் இருந்த காலத்தில் தாத்தா பாட்டிகள் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்வது வழக்கமாக இருந்தது. இன்றைய அவசரமான உலகில் குடும்பங்கள் சிதைந்தும் பிரிந்தும் பெரியவர்கள் தனியாக குழந்தைகள் தனியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தமாகி விட்டது. இன்றைய குழந்தைகளுக்கு பெரியவர்களிடம், தங்கள் தாத்தா பாட்டியிடம் கதை கேட்கும் பாக்கியம் இல்லை.

இன்று அவர்களுக்கு கார்ட்டூன் சானல்கள் சொல்லும் கதைகள் தான் தஞ்சம். அன்று பெரியவர்கள் சொன்ன கதைகளில் லாஜிக் இல்லாமலிருக்கலாம். மூடநம்பிக்கைகள் மிகைப்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் கதை என்னும் வற்றாத ஊற்று கடந்து செல்லும் பரிமாணங்கள் எட்டாத உயரத்துக்கு செல்லும். டிஜிட்டல் கதைகளின் கிராபிக்ஸ் மாயங்களைவிட பழங்கதைகளில் ஜாலங்கள் அதிகம்.

என்றோ கேட்டகதைகளின் நினைவலைகளை மீட்டி சொந்தக் கற்பனை கலந்து புதிய களத்தில் சற்றே பெரிய கதையாகச் செய்தேன். வலைப்பதிவில் ஒரு புதிய முயற்சியாக அதை சிறுசிறு பாகங்களாக ஒரு பதிவில் இட்டேன். கதையும் முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு அத்தியாயம் பாக்கி.

இங்கே...
கதைகேட்பதில் ஆர்வமுள்ள, புதிர்களை விடுவிக்க துடிப்புள்ள அன்பு நண்பர்களுக்காக என் தொடர்கதையிலிருந்து ஒரு சிறு போட்டி.

கதை இங்கே

போட்டிக்கான கேள்வி(கள்) இதுதான்

1) கதையின் ஆரம்பத்தில் வரும் பிணம் எவ்வாறு இறந்திருக்கக் கூடும்?

2) நாகமணியை கிழவர் என்ன செய்திருப்பார்?

கற்பனைக் குதிரையை ஓடவிடுங்கள்!

2006-09-17

ஜோதிகா திரைப்புதிர்

அட யாருப்பா அது? கல்யாணமான பொண்ண லுக் விடறது?

கேள்வியை நன்றாகப் படித்து பதிலை மண்டபத்தில் (சாரி மறுமொழியில்) வைத்து விடுங்கள்...

1. ஜோதிகாவின் திரையுலக முதல் நாயகன் யார்?

2. தமிழில் ஜோ நடித்த முதல் படம் எது

3. ஜோதிகா சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருது பெற்ற படம் எது?

4. ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்த அயல்நாட்டு நடிகர் யார்?

5. நக்மாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடைப்பட்ட மற்ற சகோதரி யார்?

6. ஜானகி என்ற கதாபாத்திரத்தில் ஜோ நடித்த படம் எது?

7. ஜோதிகா சூர்யாவுடன் நடித்த முதல் படம் எது?
மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்காமல் காப்பியடிக்காமல் பதில் கூறும் புலவருக்கு இம்சை அரசன் பரிசுகளை 100 சவுக்கடிகளாக வழங்குவார்.

*

அமானுஷ்ய ஆவியின் திருஷ்டி பட்ட மோகினி இங்கே...

2006-09-16

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

தேன்கூடுபோட்டி - செப்டம்பர் 2006

கொஞ்சம் லிப்ட்
கிடைக்குமா?
சாலையோரமாய்
அல்ல
வாழ்க்கையோரமாய்
காத்திருந்தேன்.

ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைக்கும் கூட்டம்
பெருகிவிட்ட காலத்தில்
ஏணிகள் அஞ்சுவது
இயற்கைதான்.

தன்னம்பிக்கை எனும்
தளரா உறுதி கூட
ஏணியாக ஏற்றிவிடும்...

தாமதமாய்
தானுணர்ந்து
ஏறுகிறேன்
வாழ்க்கையெனும்
ஏறுபாதையில்...

எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்...

-வலைஞன்


வகை: கவிதை.

தேன்கூடு போட்டிக்கு

தலைப்பு: கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
படைப்பு: வலைஞன்.

வேகமாகச் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" என்ற இளம்பெண் மறுநாள் சாலையோரம் கற்பழித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவளுக்கு எய்ட்ஸ்.


வகை: கதை [இருவரிக்கதை]

2006-09-15

தமிழ்மணம் சில பிரச்சினைகள்!

தமிழ்மணத்தில் முகப்புப் பக்கம் சிறப்பாக செயல்படுகிறது. மறுமொழி நிலவரங்களையும் உடனுக்குடன் காட்டுவது சிறப்பு.

இடுகைகள் பக்கத்திலும் எல்லாம் சுபமே. ஆனால் இடுகைகள் பக்கத்தின் ஒரு பிரிவான இடுகைகளில் தேட என்னும் பகுதி இப்போது செயலிழந்து விட்டது போலத் தோன்றுகிறது. அதில் சொற்களை இட்டுத் தேடும்போது பெரும்பாலும் தகவல் காணப்படவில்லை என்ற தகவலே வருகிறது. சில தினங்களுக்கு முன் தமிழ்மணத்தில் திரட்டப்பட்ட அறியப்பட்ட சொற்களைக்கொண்ட பதிவுகளைக்கூட பல சமயங்களில் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இது சற்று மேம்படுத்தப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

பதிவு கருவிப்பட்டைக்கு வழங்கப் பட்டிருக்கும் கோடிங் பிளாக்கர் தவிர சொந்த இணையப்பக்கத்தில் வலைப்பதிவு செய்யும் வேர்ட்பிரஸ் பயனாளிகளுக்கு மட்டுமே செயல்படுத்த முடிகிறது. blogsome வலைப்பதிவு சேவைக்கான கோடிங் நான் உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறேன். கருவிப்பட்டையும் தெரிகிறது. ஆனாலும் மறுமொழி நிலவரம் சேவை இதுவரை வழங்கப்படவில்லை.

பிளாக்கர் தவிர பிற வலைப்பதிவுகளில் உள்ள comment-feed வசதியைக் கொண்டு மறுமொழி நிலவரத்தை பதிவு கருவிப்பட்டை இல்லாமலே செயல் படுத்த இயலும். அதைச் செயல் படுத்தினால் பல வலைப்பதிவாளர்கள் பலன் பெறுவார்கள்.

அடுத்து முழுப்பட்டியல் என்னும் பகுதி. இதில் எந்த முறையில் வலைப்பதிவுகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன என்று தெரியவில்லை. அகர வரிசையிலும் ஒழுங்காக தொகுக்கப் படவில்லை. பல பதிவுகளை இதில் தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

முன்பு பழைய தமிழ்மணம் முதல் பதிப்பில் இது மிகச்சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அகரவரிசையில், காலவரிசையில் பதிவுகளை அடுக்கி நாடுவாரியாக பதிவுகளை காண முடிந்தது. அது ஏன் மாற்றப்பட்டது என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை.

தமிழ்மணத்தின் சிறப்பியல்புகளுக்கு முன் இவை சிறிய குறைபாடுகள்தான். ஆனால் அவற்றையும் களைந்து தமிழ்மணம் முழுமைபெற வேண்டும் என்ற ஆவல்தான்.

புதிய பூங்கா வலையிதழுக்கு வாழ்த்துக்கள்.

(ஒரு நினைவூட்டல்: பதிவுகள் பகுதியில் வலைப்பதிவு திரட்டிகள் தலைப்பில் புதிய தமிழ்ப்பதிவுகள் திரட்டிக்கான [http://tamilblogs.com/] சுட்டி இணைக்கப்படவில்லை)
*
வாசகர்களுக்கு:

விஜயகாந்தும் போலீசும்

தொடர்கதை படிக்க விரும்புவோருக்கு:

தொடர்கதை : ராசமணி

பிளாக்கர் பீட்டாவில்...

பிளாக்கர் பதிவுகளை பிளாக்கர் பீட்டாவுக்கு மாற்றியதால் தங்கள் பதிவுகள் இழந்ததாக பல வலைப்பதிவர்களின் புலம்பல் கேட்க முடிந்தது. எச்சரிக்கையாக தங்கள் gmail கணக்கைக்கொண்டு புதிய beta பதிவு ஒன்றை உருவாக்கி சோதித்துப் பார்த்து விட்டு பதிவு மாற்றம் செய்திருக்க வேண்டாமோ.? (திட்டப்போறாங்க!)

புதிய பிளாக்கர் பீட்டாவில் என்னால் முடிந்த எல்லா சாத்தியக்கூறுகளையும் சோதித்துப் பார்த்த வலைப்பதிவு இது. இது ஒரு திரட்டியாக செயல்படுகிறது. வடிவமைப்பும் செய்ய முடிகிறது. ஆனால் இதுவரை தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் தரும் நிரல்களை இணைக்க முடியவில்லை. html எடிட் வசதி இப்போதைக்கு முழுமையாக செயல்படவில்லை. விரைவில் சரியாகலாம்.

பீட்டா திரட்டியை நீங்களும் பாருங்கள்

2006-09-14

பயர்பாக்சும் தமிழும்

இன்று இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற மைக்ரோசாப்ட் வலையுலாவிக்கு மாற்றாக பயர்பாக்ஸ் என்ற திறவூற்று வலையுலாவி பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பொதுவில் பயர்பாக்ஸ் ஒரு சிறந்த வலையுலாவியாக இருந்தாலும் புதிய இணைய அலங்காரங்கள் உள்ள பக்கங்களில் தமிழ் போன்ற மொழிகளை குறிப்பாக யூனிகோடு எழுத்துருக்களை சரியாகக் காண முடிவதில்லை என்பது மிக முக்கியமான குறைபாடாக இருந்து வருகிறது.

வலைப்பதிவுகளில் இன்று பல புதிய வடிவமைப்புகள் உருவாகி வருகின்றன. அவற்றை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியில் அழகாகக் காண முடிகிற அளவுக்கு பயர்பாக்ஸ்சில் காண முடிவதில்லை. ஆனாலும் அதன் பிற பயன்பாடுகள் அதை சிறந்த உலவியாக நிலைநிறுத்துகின்றன. ஆனால் மொழியைச் சரியாகக் காட்ட முடிவதில்லை என்பது பெரிய குறைதானே?

இதற்கு என்ன மாற்று என்று சிந்திக்கும்போது இப்போது பத்மா என்ற இணைப்பு நீட்சி இதற்கு தீர்வாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இதிலும் சில குறைபாடுகள் சொல்லப் படுகிறது.

அதேசமயம் அனைத்து பிரச்சினைகளும் வலைப்பக்க நிரல்களால் உருவாவதால் அதே நிரல்களில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.

முதலாவதாக பல வலைப்பதிவுகளில் தலைப்புப்பகுதி எழுத்துக்கள் இழைபிரிந்து நிற்கின்றன. இதற்குக் காரணமாக அமைவது letter-spacing என்ற பண்பை style sheet எனப்படும் அலங்கரிப்பு/வடிவ சீரமைப்பு நிரலில் இணைப்பது தான். எனவே இந்த வரியை/நீக்கி விடுவதன் மூலம் இயல்பான எழுத்து இடைவெளியை உலாவிகள் உணர்ந்து கொள்ளும். சில இடங்களில் line-space என்ற பண்பும் பிரச்சினை செய்யலாம். அதையும் நீக்கி சோதிக்கலாம். ஆனால் சில வலைவடிவமைப்புகளில் !important என்று குறிப்பிட்டு மேற்கண்ட letter-spacing பண்பை வைத்திருப்பார்கள் அதில் மாற்றம் செய்தால் பக்க அமைப்பில் குளறுபடிகள் நேரலாம். அதை சற்று நிதானமாக சோதித்து வேறு மாற்றங்களையும் செயல்படுத்த வேண்டும்.

அடுத்ததாக மற்றும் முக்கியமாக text-align:justify என்ற பண்பை பயன்படுத்தும்போது இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் பக்கம் அழகு பெறுகிறது. அதேசமயம் பயர்பாக்ஸ்சில் எல்லா எழுத்துக்களும் கலைந்து குப்பையாகி விடும். இதற்கு ஒரு எளிய நிரலை style sheet இல் இணைப்பதின் மூலம் தீர்வு காணலாம்.

முதலில் text-align:justify என்ற பண்பு style sheet இல் எங்கெங்கு காணப்படுகிறதோ அவற்றை நீக்கி விட வேண்டும். அடுத்து பின்வரும் நிரலை style sheet இன் ஆரம்பத்தில் இணைக்க வேண்டும்.
----------------
body, p{
text-align: justify;
}
html>body, p{
/* only firefox can read this. IE can't */
text-align: left;
}
----------------
இதன் மூலம் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் text-align:justify செயல்படவும் பயர்பாக்ஸ்சில் பழையபடி text-align:left ஆகவும் இருப்பதால் எழுத்துக்கள் சரியாக வெளிப்படுகின்றன.

இவை முன்பு பயர்பாக்ஸ் பற்றிய விவாதங்கள் நடைபெற்ற போது நண்பர்களால் முன்வைக்கப்பட்ட பல யோசனைகளில் மிக எளிமையானவையும் வெற்றிகரமானவையுமாக என்னால் சோதித்தறியப் பட்டவை.

இந்த மாற்றங்கள் நான் வெற்றிகரமாக என் வலைப்திவுகளில் பயன்படுத்தி செயல்படுத்தியவை. எனவே நிச்சயமாக இவை பயன்தரும்.

நீங்களும் முயன்று பாருங்கள்.

2006-09-12

பயர்பாக்ஸ் கேள்வி

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் பயர்பாக்சில் தமிழ் எழுத்துக்கள் குழம்பித் தெரிவது பற்றி பெரிய விவாதமே நடைபெற்றது. இப்போது அதைப்பற்றி பெரிதாக பேசப்படக் காணவில்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் பயர்பாக்சில் இந்த பிரச்சினைகள் தீர்க்கப் பட்டு விட்டதா? யாருக்காவது ஏதாவது பதிவுகள் இப்போதும் குழம்பித் தெரிகின்றதா? தீர்வு கண்டவர்கள் அது பற்றி இங்கு மறுமொழியிடுங்கள்.

*

அப்படியே கவிதை படிக்க ஆர்வமுள்ளவர்கள் படித்ததில் பிடித்த இரண்டு கவிதைகளை ஒரு பார்வை பார்த்து விடலாம். ஒன்று இம்சை அரசன் இயக்குநர் சிம்புதேவனின் கிட்டி வெளாடுவோம் வர்ரியா? (நன்றி பாலபாரதி). மற்றொன்று வாரமலர் புகழ் க. சந்திரகலாவின் பறந்து போன பறவைக்கு...

2006-09-03

ரஜினி புதிர் 2 விடை

கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு
மனுசன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு (2)
ஐயா மேலே சாமி வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும் (2)

அந்திபட்ட நேரத்திலே சந்திரன ஒருத்தன் பார்த்தான்
அவன் கூட வந்தவனும் சூரியன் தான் அதுன்னான்
சந்திரனா சூரியனா சண்ட வந்து சேர்ந்ததய்யா
இந்த நேரம் பார்த்து..எதுத்தால ஒரு மனுசன்
தள்ளாடி தள்ளாடி தல கீழா நடந்து வந்தான்
சண்டையிட்ட ரெண்டு பேரும் சாட்சியா அவன வச்சி
சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு என்னான்..
எனக்கொன்னும் தெரியாது நா வெளியூருன்னு பூட்டான் அவன்

என்ன தான் போட்டாலும் நிதானம் தான் தப்பாது
இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதையா
கன்னியை தாயென்பேன் கிழவியை கன்னி என்பேன்
கன்ரோலு கொஞ்சம் கூட கொறையாதையா
அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
யாரு பெரியவன்டா டேய் தம்பி

[கடவுள்...]


ஒரு பெண்ண பார்த்தேன்.. என்னம்மா கல்யாணம் ஆச்சான்னேன்..
ஆகலன்னா.. குழந்த குட்டி இருக்கான்னேன்...குடுத்தா பளார்னு
நா விடுவேனா.. அடுத்த பெண்ண பார்த்து
முன்கூட்டியே குழந்த குட்டி இருக்கான்னேன்
ஆமா! ரெண்டு கொழந்த இருக்குன்னா...
அப்புறம் தான்..கல்யாணம் ஆச்சான்ன்னு கேட்டேன்..
அன்னைக்கு தான் தங்க பல்லு கட்டவேண்டிய அவசியம் வந்தது.

விஸ்கிய போட்டேன்னா இங்கிலிசு பாட்டெடுப்பேன்
சாராயம் உள்ளே போனா தமிழ் பாட்டு.
கள்ள குடிச்சேன்னா நாடோடி பாட்டு வரும்
கல்லுக்கும் டான்சு வரும் அத கேட்டு.
அட ஆகாயம் கால் மேலே...பூலோகம் கை மேலே
ஆடி காட்டுகிறேன் வா நைனா..

[கடவுள்...]


படம்: போக்கிரிராஜா

ரஜினி, ஸ்ரீதேவி, ராதிகா, முத்துராமன் நடித்தது.

1. பாடல் கேட்க

2. mp3 download

2006-09-01

ரஜினி சினிமா - புதிர் 2

Image and video hosting by TinyPic

ரஜினியின் அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற

வந்தேண்டா பால்காரன்... பாடலில்

மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க

என்று வைரமுத்து எழுதியிருக்கிறார்.

கண்ணதாசன் சொன்ன பாடல் எந்தப் (படப்)பாடல்?

ரஜினி புதிர்-1 விடை

சரியான விடை எழுதியவர்கள் சிங்கை நாதன்(Senthil), karthi(Anonymous), (rajkumar) , (Ganesh), (ஊமை), (Kannan), (Balamurugan), (காழியன்) ஆகியோர். நன்றி

சமீபத்தில் தொலைக்காட்சி யொன்றில் ரஜினி நடித்த தமிழ் சினிமாவைப் பார்க்க நேர்ந்தது. இதுவரை பார்க்காத படமாக இருக்கிறதே என்று கொஞ்சம் ஆர்வத்தோடு பார்த்த போது அது ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப்படமான bloodstone படத்தின் தமிழாக்கம் என்று தெரிந்தது. ஆங்கிலப்படம் என்றவுடன் தொழில் நுட்பம் என்று பார்த்தால் இன்றைய ஆங்கிலப்படங்களில் உள்ள நேர்த்தி தெரியவில்லை. சொல்லப்போனால் இன்றைய தமிழ்ப்படங்களின் அளவு கூட இல்லை.

தேனிலவுக்காக இந்தியா வரும் வெள்ளைக்கார இளஞ்சோடி சந்திக்கும் பிரச்சினைகள் தான் கதை, மன்னர் கால மாணிக்கக் கல் ஒன்று திருடுபோகிறது. போலீஸ் துரத்தியதால் கொள்ளையர்கள் அதை தேனிலவு ஜோடியின் பைக்குள் இட்டுவிடுகிறார்கள். பிறகு அதைக் கைப்பற்ற கதாநாயகி கடத்தப்பட்டு பேரம் பேசப்படுகிறது. அதற்குள் இந்திய டாக்சி டிரைவரான ரஜினியின் கையில் அந்த வைரம் கிடைக்கிறது. ரஜினி கதாநாயகனுக்கு உதவுகிறார்.ரஜினிக்கு சேரிக்கார வாலுகள் உதவி. சேசிங், பைட்டிங் மசாலாக்களுக்குப்பின் கதாநாயகியும் மாணிக்கமும் மீட்கப்பட்டு சுபம். வழக்கமான மசாலா மிக்சர். வெள்ளைக்கார முகங்களுக்கு நடுவே ரஜினியின் கறுப்பு முகம் என்ற வித்தியாசம் மட்டும். நடுநடுவே ரஜினி ஜாக்கிசான் பாணி கலாட்டாக்கள் செய்வது மட்டுமே ஆறுதல்.

BloodStone - directed by Dwight Little

Producer: Ashok AmirthaRaj, MuraliManohar

Cast: Rajnikant, Breet Stimely, Anna Nicholas

Music :ilayaraja