2005-02-13

வாசக மனம்

ஜூவியில் ரவிசுப்பிரமணியத்தை மிரட்டிய பெண் வக்கீல்கள் பற்றிய செய்தியைப் படித்த என் நண்பர் "ஜெயேந்திரரை மீண்டும் சிறைக்கனுப்ப போலீஸ் என்னவெல்லாம் கதை கட்டுகிறது." என்றார் அதிரடியாக.

"காஞ்சி சங்கராச்சாரி சிறப்(தொகுப்)பிதழ்" என்ற தலைப்பில் இதுவரை பல்வேறு இதழ்களில் வெளியான பலவேறு கட்டுரைகள் அடங்கிய "நாளை விடியும்"என்ற பகுத்தறிவு சிறுபத்திரிகை அப்போதுதான் வந்திருந்தது. அதை எடுத்து நண்பரின் கையில் கொடுத்தேன். தலையங்கத்தைப் படித்ததுமே தி.க.வா? என்றபடி கீழே போட்டார் நண்பர்.

இத்தனைக்கும் நண்பர் நிறைய வாசிப்பவர். அவரது வாசிப்புகள் உடன்பாடுள்ள கருத்துக்கள் சார்ந்தவையாக மட்டுமே இருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்க்கருத்துக்ளையும் தேடிப்படிப்பதே நமது கருத்துக்களை சீர்தூக்க உதவும். என்ற எண்ணமுள்ள எனக்கு நண்பரின் செயல் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது.

//(அரசியல் இயக்கங்களில் உள்ள வாசகர்கள் திட்டமிட்டே ஒரு எழுத்தாளரைப் படிப்பதை புறக்கணிப்பார்களா? - எனக்குப் புரியவில்லை - சுரேஷ் கண்ணன்)
# வாசகர்களில் இரண்டுவகை உள்ளனர். தமக்கு விருப்பமான மற்றும் விருப்பமற்ற எல்லாவற்றையும் தேடிப்பிடித்து படிப்பவர்கள் ஒருவகை. மற்றொருவகை, தன் சித்தாந்தத்திற்கு ஒப்புதல் உள்ள, தாம் தீவிரமாக நம்புகிற, தன் நம்பிக்கைகளை தொந்தரவு செய்யாத படைப்புகளை மட்டும் படிப்பது. குதிரைக்கு சேணம் மாட்டினாற் போல் இருக்கிற இந்த வகை சரியானது அல்ல. முதற்வகை வாசகர்களே இலக்கியத்திற்கு செழுமை சேர்க்கிறார்கள்.//

சுரேஷ் கண்ணன் பதிவிலிருந்து.......இதைப்படித்த பாதிப்பில் மேற்கண்ட என் அனுபவம்.....

அரசியல் இயக்கங்களில் உள்ளவர்கள் மட்டுமல்ல. எல்லா வாசகர்களுக்குமே மேற்கண்ட (சுராவின்) கருத்து பொருந்தும்...

No comments: