2006-05-09

தேர்தல்பிற செய்திகள்

9 மே 2006

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 70.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களை வெளியிட்டார். அதிக பட்சமாக கருர் மாவட்டத்தில் 77.5 சதவீதமும் குறைந்த பட்சமாக சென்னையில் 58.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. சில தொகுதிகளில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சில குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் 85 சதவீதத்துக்குமேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இவ்வாறு அசாதாரண வாக்குப்பதிவு உள்ள பகுதிகளில் கள்ள ஓட்ட போடப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. ஆவணங்களின் அடிப்படையில் அவ்வாறு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிய வந்துள்ளது.

ஆயினும் இயந்திரக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தில் 10 தொகுதிகளைச் சேர்ந்த 18 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

வியாழக்கிழமை 234 தொகுதிகளுக்கான வாக்குகள் மொத்தம் 82 மையங்களில் எண்ணப்படுகிறது.

திண்டிவனம் தொகுதியில் ஏற்பட்ட தேர்தல் கலவரத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். அதிமுக வேட்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகிறது.

தூத்துக்குடியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஆயிரக்கணக்கான குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

No comments: